ADDED : ஆக 27, 2025 02:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரம்பலுார்:பெரம்பலுார் மாவட்டம், தேனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபு, 33. இவர், பேக்கரியில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, அதே பகுதியில் அவர் கட்டி வரும் கலைஞர் கனவு இல்லத்தில், செப்டிக் டேங்க் கட்ட குழி தோண்டிக் கொண்டிருந்தார்.
அப்போது, குழியில் தென்பட்ட பாறையை மின்கருவியால் துளைத்து உடைக்கும் போது, ஒயரில் இருந்து, எதிர்பாராவிதமாக கசிவு ஏற்பட்டு, பிரபு மீது மின்சாரம் பாய்ந்தது. இதில், துாக்கி வீசப்பட்டு அவர் படுகாயமடைந்தார்.
அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு துறையூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பாடாலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.