sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

வெப்பத்தின் தாக்கம் அதிகம்; தலையில் குடை சூடிய தொழிலாளர்

/

வெப்பத்தின் தாக்கம் அதிகம்; தலையில் குடை சூடிய தொழிலாளர்

வெப்பத்தின் தாக்கம் அதிகம்; தலையில் குடை சூடிய தொழிலாளர்

வெப்பத்தின் தாக்கம் அதிகம்; தலையில் குடை சூடிய தொழிலாளர்


ADDED : அக் 02, 2024 11:56 PM

Google News

ADDED : அக் 02, 2024 11:56 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலுார் : பந்தலுார் பகுதியில் மழையுடன் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், தலையில் குடை சூடி தொழிலாளர்கள் இலை பறிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தென்மேற்கு பருவமழையின் தாக்கம், பந்தலுார் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது, மாலை நேரத்தில் மட்டுமே லேசாக தலைகாட்டும் மழை; மற்ற நேரங்களில் கடும் வெயில் என காலநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இரவில் சமவெளி பகுதிகளை போல் கடும் வெப்பமான காலநிலை நிலவி வருவதால், ஏசி மற்றும் மின்விசிறிகளை பயன்படுத்தி உறங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

இந்நிலையில், பகல் நேரங்களில் சுட்டெரிக்கும் வெயிலால், பெண் தோட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இவர்கள் வெப்பத்தின் தாக்கத்திலிருந்து தங்களை தற்காத்து கொள்ள, தலையில், சிறிய குடைகளை சூடி இலை பறிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் மூலம் வெயிலின் தாக்கம் சற்று குறைந்து, சோர்வடையாமல் பணி மேற்கொள்கின்றனர். இவர்கள் பணி செய்யும் காட்சி பயணிகளை கவர்ந்து வருகிறது.






      Dinamalar
      Follow us