sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஜனவரி 04, 2026 ,மார்கழி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

மார்லிமந்தில் 50 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு விடும் முடிவை கைவிட வேண்டும்! மக்களுக்கான பாதிப்பு குறித்து மாநில முதல்வருக்கு மனு

/

மார்லிமந்தில் 50 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு விடும் முடிவை கைவிட வேண்டும்! மக்களுக்கான பாதிப்பு குறித்து மாநில முதல்வருக்கு மனு

மார்லிமந்தில் 50 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு விடும் முடிவை கைவிட வேண்டும்! மக்களுக்கான பாதிப்பு குறித்து மாநில முதல்வருக்கு மனு

மார்லிமந்தில் 50 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு விடும் முடிவை கைவிட வேண்டும்! மக்களுக்கான பாதிப்பு குறித்து மாநில முதல்வருக்கு மனு


ADDED : அக் 24, 2024 08:42 PM

Google News

ADDED : அக் 24, 2024 08:42 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி: 'ஊட்டி மார்லிமந்து அணையை சுற்றியுள்ள நகராட்சிக்கு சொந்தமான, 50 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு விடும் நடவடிக்கையை கைவிட வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஊட்டி நகராட்சியில், 36 வார்டுகள் உள்ளன. 1.30 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள, பார்சன்ஸ்வேலி, மார்லிமந்து, டைகர்ஹில், ஓல்டு ஊட்டி, கோரிசோலை, அப்பர் தொட்டபெட்டா, லோயர் தொட்டபெட்டா உள்ளிட்ட நீராதார பகுதிகளிலிருந்து தண்ணீர் கொண்டு வரப்பட்டு, அந்தந்த வார்டுகளில் உள்ள நீர் தேக்க தொட்டியில் சேமித்த பின், வார்டுகளுக்கு வினியோகிக்கப்படுகிறது.

அதில், மார்லிமந்து அணை கட்டுமான பணி, பிரிட்டீஷ் காலத்தில், 1868ம் ஆண்டு தொடங்கி, 1870 ம் ஆண்டு நிறைவடைந்தது. அந்த காலத்தில் ஊட்டி நகராட்சிக்கு முக்கிய நீராதாரமாக மார்லிமந்து நீர்தேக்கம் இருந்தது. அப்பகுதியில் பழங்குடியின மக்கள் வசித்து வந்ததற்கான ஆதாரங்களும் உள்ளது. அதன்பின், மக்கள் தொகைக்கு ஏற்றார் போல் பிற நீராதாரங்கள் இப்பகுதியில் அமைக்கப்பட்டன.

நகராட்சி கட்டுப்பாட்டில் 50 ஏக்கர்


இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த மார்லிமந்து நீர் தேக்கத்திலிருந்து, தற்போது, 15 வார்டுகளுக்கு குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. அணையை சுற்றி சோலை வனப்பகுதியாக, 50 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை விவசாய பயன்பாட்டுக்கு குத்தகைக்கு விட நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டது. பல கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த இடத்தை சொற்ப தொகைக்கு சிலர் குத்தகைக்கு எடுக்க திட்டமிட்டுள்ளனர்.

இந்த முடிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வந்த நிலையில், கடந்த இரு மாதங்களாக நகரமன்ற ஒப்புதலுக்கு கொண்டு வரப்பட்டு கவுன்சிலர்களின் எதிர்ப்பால் ஒத்தி வைக்கப்பட்டது. தீர்மானத்துக்கு ஒப்புதல் பெற சமீபத்தில் முன்னறிவிப்பு இல்லாமல் அவசர கூட்டம் நடத்தப்பட்டது. 'இந்த தீர்மானத்தை கைவிட வேண்டும்' என, ஆரம்பம் முதல் அ.தி.மு.க., உட்பட பல கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மாநில முதல்வருக்கு மனு


இந்த அணை நீரை பயன்படுத்தும், ஊட்டி நகர மக்கள் கூறுகையில், ''நகரின், 15 வார்டுகளுக்கு குடிநீர் ஆதாரமாக உள்ள மார்லிமந்து பகுதியில், 50 ஏக்கர் இடத்தை குத்தகைக்கு விட முயற்சிகள் நடந்து வருகின்றன. இப்பகுதியில் பல மரங்கள் உள்ளன.

நகராட்சிக்கு வருவாய் தேவைப்படும் பட்சத்தில், அரசிடம் அனுமதி பெற்று, கற்பூர மரங்களை வெட்டி விற்பனை செய்தாலே பல கோடி ரூபாய் வரை கிடைக்கும்.

இதை தவிர்த்து தனி நபருக்காக, 3 ஆண்டுகளுக்கு சொர்ப்ப தொகைக்கு ஏலம் விட முயற்சி நடக்கிறது. இதனால், மக்களுக்கான குடிநீர் மாசுபடும் அபாயம் உள்ளது.

இதனை நகராட்சி நிர்வாகம் தவிர்க்க வேண்டும்,'' என்றனர்.

நீலகிரி ஆவண காப்பக இயக்குனர் வேணுகோபால் கூறுகையில், ''பிரிட்டீஷ் காலத்தில் ஊட்டி நகரில் குடிநீர் பஞ்சத்தை போக்க மார்லிமந்து நீராதாரம் முக்கியமாக இருந்தது. மார்லிமந்து ஒட்டி பல ஏக்கர் நிலத்தை நகராட்சி நிர்வாகம் குத்தகைக்கு விட திட்டமிட்டிருப்பது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். இதற்கான நடவடிக்கையை நகராட்சி நிர்வாகம் கைவிட வேண்டும்.

இது குறித்து மாநில முதல்வர், மாவட்ட கலெக்டருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது. இத்தகைய முடிவுகள் மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்,'' என்றார்.

குடிநீர் மாசடையும்!

மார்லிமந்து அணையை சுற்றியுள்ள, 50 ஏக்கர் நிலத்தை குத்தகை அடிப்படையில், விவசாய பயன்பாட்டுக்கு அனுமதிக்கும் பட்சத்தில், விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் ரசாயன உரங்கள், பூச்சி கொல்லி மருந்துகளால் நீர் மாசடைவதுடன், அப்பகுதியில் உள்ள வன சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தல் ஏற்படும். இதனால், மக்களுக்கும் நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு இந்த திட்டத்தை நகராட்சி கைவிட வேண்டும்.








      Dinamalar
      Follow us