/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'தினமலர் -பட்டம்' இதழ் சார்பில் 'வினாடி-வினா' போட்டி கக்குச்சி மகாத்மா காந்தி பள்ளி மாணவர்கள் அசத்தல்
/
'தினமலர் -பட்டம்' இதழ் சார்பில் 'வினாடி-வினா' போட்டி கக்குச்சி மகாத்மா காந்தி பள்ளி மாணவர்கள் அசத்தல்
'தினமலர் -பட்டம்' இதழ் சார்பில் 'வினாடி-வினா' போட்டி கக்குச்சி மகாத்மா காந்தி பள்ளி மாணவர்கள் அசத்தல்
'தினமலர் -பட்டம்' இதழ் சார்பில் 'வினாடி-வினா' போட்டி கக்குச்சி மகாத்மா காந்தி பள்ளி மாணவர்கள் அசத்தல்
ADDED : டிச 23, 2025 07:07 AM

கோத்தகிரி: 'தினமலர்' நாளி தழில் மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ் மற்றும் எஸ்.என்.எஸ்., கல்வி குழுமம் சார்பில், 'பதில் சொல் பரிசை வெல்' வினாடி வினா போட்டி, கோத்தகிரி அருகே உள்ள கக்குச்சி மகாத்மா காந்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
மாணவர்களின் கற்றல் ஆர்வத்தையும், நுண்ணறிவு திறனை ஊக்குவித்து, படிப்பின் மீதான ஆர்வத்தை விரிவு படுத்துவதற்காக, 'தினமலர்' நாளிதழில் மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ் சார்பில், மெகா வினாடி-வினா போட்டி கள் ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன.
நடப்பாண்டு, 'தினமலர்' நாளிதழில் 'பட்டம்' இதழ் மற்றும் எஸ்.என்.எஸ்., கல்வி குழுமம் இணைந்து நடத்தும் வினாடி-வினா போட்டிக்கு, 'சத்யா ஏஜென்சிஸ் மற்றும்' ஸ்போர்ட்ஸ் லேண்ட்' நிறுவனங்கள், 'கிப்ட் ஸ்பான்சர்'களாக இணைந்துள்ளன.
இப்போட்டியில், கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் இருந்து, 150க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்கின்றனர். பள்ளி அளவில் முதலிடம் பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறுவர்.
அவர்களில் இருந்து தேர்வாகும், எட்டு அணியினர் இறுதி போட்டியில் பங்கேற்பர். இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளன. இதன் ஒரு பகுதி யாக, கோத்தகிரி அருகே உள்ள கக்குச்சி மகாத்மா காந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், வினாடி- -வினா போட்டி நடந்தது. தகுதி சுற்றில், 150 மாணவர்கள் பங்கேற்றனர். அதில், அதிக மதிப்பெண் பெற்ற, 16 மாணவ, மாணவியர், எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டு பள்ளியளவில் இறுதி போட்டியில் பங்கேற்றனர்.
மூன்று சுற்றுக்களாக நடந்த விறுவிறுப்பான இறுதிப்போட்டியில், 'பி' அணி முதல் பரிசை வென்றது. அந்த அணியில் இடம் பெற்ற, தீப்தி மற்றும் சமீதா அரை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றனர். அவர் களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. கோவையில் நடைபெறும் இறுதிப் போட்டியில், இந்த மாணவியர் பங்கேற்க உள்ளனர்.

