sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

 வனப்பகுதியில் 'இப்படோரியம்' களை செடிகள்: விலங்குகளின் உணவு தாவரங்களுக்கு பெரும் ஆபத்து

/

 வனப்பகுதியில் 'இப்படோரியம்' களை செடிகள்: விலங்குகளின் உணவு தாவரங்களுக்கு பெரும் ஆபத்து

 வனப்பகுதியில் 'இப்படோரியம்' களை செடிகள்: விலங்குகளின் உணவு தாவரங்களுக்கு பெரும் ஆபத்து

 வனப்பகுதியில் 'இப்படோரியம்' களை செடிகள்: விலங்குகளின் உணவு தாவரங்களுக்கு பெரும் ஆபத்து


UPDATED : டிச 23, 2025 08:04 AM

ADDED : டிச 23, 2025 07:02 AM

Google News

UPDATED : டிச 23, 2025 08:04 AM ADDED : டிச 23, 2025 07:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்: கூடலுார் வனப்பகுதியில் அதிகரித்து வரும் 'இப்படோரியம்' களைச் செடிகளால் வனச் சூழலுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம், கூடலூர் பகுதியில் எந்த பயனும் இல்லாத உண்ணி, பார் த்தீனியம் செடிகள் அதிகளவில் காணப்படுகிறது. இவைகளால், வனப்பகுதிகளில், தாவர உண்ணிகள் விரும்பி உண்ணக் கூடிய தாவரங்கள், புற்கள் வளர முடியாத நிலை உள்ளது. இதனால், வனவிலங்குகளுக்கு உணவு தட்டுப்பாடு அதிகரிக்கும் சூழல் ஏற்படுவதுடன், வனவிலங்குகள் இடம் பெயர்ந்து செல்வதிலும் சிரமங்கள் உள்ளது. இதனை தடுக்கும் வகையில், ஐகோர்ட் உத்தரவின் படி, வனத்துறையினர் உண்ணிச் செடிகளை அகற்றி வருகின்றனர்.

இந்நிலையில், உண்ணி செடிகள் போன்று தற்போது, கூடலுாரில் வனம் மற்றும் சாலையோரங்கள், இப்படோரியம் என்ற பயனற்ற களைச் செடிகள், அதிகளவில் வளர துவங்கி உள்ளது. விரைவாக பரவக்கூடிய இந்த செடிகளால் வனச் சூழலுக்கு ஆபத்து ஏற்பட்டு, தாவர உண்ணிகளுக்கு உணவு தட்டுப்பாடு அதிகரிக்கும் ஆபத்து உள்ளது.

வனவிலங்கு ஆர்வலர்கள் கூறுகையில், 'கூடலுாரில் புதிதாக பரவ துவங்கியுள்ள இப்படோரியும் செடிகளால் வனவிலங்குகள் விரும்பி உண்ண கூடிய தாவரங்களின் பரப்பளவு குறைந்து, அவைகளுக்கு உணவு தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. எனவே, உண்ணி செடிகளை போன்று, இப்படோரியம் செடிகளையும் முன்னெச்சரிக்கையாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் அவைகள் வனப்பகுதியில் பரவுவதை தடுக்க முடியும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us