/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
இலவச கல்வி உதவி திட்டம்: மாணவர்களுக்கு உதவி தொகை
/
இலவச கல்வி உதவி திட்டம்: மாணவர்களுக்கு உதவி தொகை
ADDED : பிப் 06, 2024 10:05 PM
ஊட்டி:இலவச கல்வி திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், மூன்றாண்டு இளங்கலை பட்ட படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் மாணவர்களுக்கு, இலவச கல்வி திட்டத்தின் கீழ், கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.
முதுகலை, பாலிடெக்னிக், தொழிற் படிப்பு உட்பட பிற படிப்புகளுக்கு, பெற்றோர் ஆண்டு வருமானம், 2.50 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
நடப்பாண்டில் புதிய மாணவர்கள் https://ssp.tn.gov.in என்ற இணைய தள முகவரியில், 'ஸ்டூடென்ட் லாகினில்' சென்று, ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும்.
கல்வி உதவித்தொகை இணையதளம், இம்மாதம், முதல் தேதியில் இருந்து செயல்பட துவங்கும். விண்ணப்பங்கள் இம்மாதம், 29ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
கூடுதல் விபரங்களுக்கு, கல்லுாரியில் உள்ள கல்வி உதவித்தொகை உதவியாளர்; ஊட்டி பிங்கர் போஸ்ட் பகுதியில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

