ADDED : ஜன 22, 2026 05:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோத்தகிரி: கோத்தகிரி நகராட்சி துாய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.
பள்ளி மாணவர்களுக்கு, காலை உணவு வழங்குவது போல, நகராட்சி மற்றும் பேரூராட்சி துாய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம், மாநில அரசால் சமீபத்தில் துவக்கி வைக்கப்பட்டது. இத்திட்டம், துாய்மை பணியாளர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
கோத்தகிரி நகராட்சியில் நிரந்தர மற்றும் தற்காலிகமாக பணிப்புரியும், 80க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது.
காலை, 8:00 மணிக்கு நகராட்சி அலுவலகத்திற்கு வரும் உணவை, துாய்மை பணியாளர்கள் வாங்கி சென்று உட்கொள்கின்றனர்.

