sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

 முட்டைக்கோஸ் அறுவடை செய்வதில் விவசாயிகள் ஆர்வம்

/

 முட்டைக்கோஸ் அறுவடை செய்வதில் விவசாயிகள் ஆர்வம்

 முட்டைக்கோஸ் அறுவடை செய்வதில் விவசாயிகள் ஆர்வம்

 முட்டைக்கோஸ் அறுவடை செய்வதில் விவசாயிகள் ஆர்வம்


ADDED : டிச 13, 2025 08:01 AM

Google News

ADDED : டிச 13, 2025 08:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோத்தகிரி: கோத்தகிரி பகுதியில் முட்டைக்கோஸ் அறுவடை செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில், தேயிலை விவசாயம் பிரதானமாக இருந்தாலும், நீர் ஆதாரமுள்ள விளைநிலங்களில் மலை காய்கறி சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.

இடுபொருட்களின் விலையேற்றம், கூலி உயர்வு, லாரி வாடகை, ஏற்று இறக்கு கூலி மற்றும் மண்டி கமிஷன் உள்ளிட்ட செலவினங்களால், மலை காய்கறி பயிரிட அதிக முதலீடு தேவைப்படுகிறது.

இருப்பினும், பொருளாதார நெருக்கடியில், விவசாயிகள் கடன் பெற்று சாகுபடி மேற்கொண்டு வருகின்றனர். கோத்தகிரி பகுதியில், ஈளாடா, நெடுகுளா, கூக்கல்தொரை மற்றும் கட்டபெட்டு உள்ளிட்ட பகுதிகளில் நடப்பாண்டு, அதிக பரப்பளவில் முட்டைகோஸ் பயிரிடப்பட்டு, விவசாயிகள் பராமரித்து வருகின்றனர்.

தற்போது, ஒரு கிலோ முட்டைக்கோஸ், மேட்டுப்பாளையம் மண்டிகளில், 25 முதல், 30 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. உள்ளூர் மார்க்கெட்டில், 35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை போதுமானதாக இல்லை என்றாலும், கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், விவசாயிகளுக்கு ஓரளவு ஆறுதலாக உள்ளது.

இதனால், தயாரான முட்டைகோஸை ஆர்வத்துடன் அறுவடை செய்யும் விவசாயிகள், மேட்டுப்பாளையம் மண்டிகளுக்கு விற்பனைக்காக, கொண்டு செல்லும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us