sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

ஆயிரம் வில்லி பகவதி அம்மன் கோவில் திருவிழா தாலப்பொலி ஏந்தி பெண்கள் பங்கேற்பு

/

ஆயிரம் வில்லி பகவதி அம்மன் கோவில் திருவிழா தாலப்பொலி ஏந்தி பெண்கள் பங்கேற்பு

ஆயிரம் வில்லி பகவதி அம்மன் கோவில் திருவிழா தாலப்பொலி ஏந்தி பெண்கள் பங்கேற்பு

ஆயிரம் வில்லி பகவதி அம்மன் கோவில் திருவிழா தாலப்பொலி ஏந்தி பெண்கள் பங்கேற்பு


ADDED : பிப் 25, 2024 10:57 PM

Google News

ADDED : பிப் 25, 2024 10:57 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்:கூடலுார் புளியம்பாறை ஸ்ரீ ஆயிரம் வில்லி பகவதி அம்மன் கோவில் தேர் திருவிழாவில், பெண்கள் தாலப்பொலி ஏந்தி பங்கேற்றனர்.

கூடலுார் புளியம்பாறையில் மிகவும் பழமையான, ஸ்ரீ ஆயிரம் வில்லி பகவதி அம்மன் கோவில் தேர் திருவிழா நேற்று முன்தினம் காலை, 5:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கியது. 6:00 மணிக்கு பஞ்சகவ்ய கலசம் நிகழ்ச்சியும், 9:00 மணிக்கு கொடியேற்ற நிகழ்ச்சியும் நடந்தது.

காலை, 11:30 மணிக்கு பெரிய வீடு வண்ணார குடியிலிருந்து புறப்பட்ட இளநீர் பூங்குழல், தாலப்பொலியுடன் ஊர்வலம் கோவிலை வந்தடைந்தது.

இரவு, 7:30 மணிக்கு அட்டிக்கொல்லி பகவதி அம்மன் கோவிலில் இருந்து, செண்டை மேளம், பழங்குடியினர் பாரம்பரிய இசையுடன் தேர் ஊர்வலம் துவங்கியது. ஊர்வலத்தில், குழந்தைகள், பெண்கள் தாலப்பொலி ஏந்தி பங்கேற்றனர்.

ஊர்வலம் மரப்பாலம் -புளியம்பாறை சாலை, ஆத்துார் சாலை வழியாக கோவிலை சென்றடைந்தது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடந்தது.

நேற்று, காலை, 6:00 மணிக்கு கணபதி ஹோமமும் தொடர்ந்து சிறப்பு பூஜைகளும், அருள் வாக்கு நிகழ்ச்சியும் நடந்தது. மதியம் காணிக்கை பொருள்கள் ஏலம் விடும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து மாலை, 5:00 மணிக்கு சிறப்பு பூஜைகளுடன் நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றது.






      Dinamalar
      Follow us