/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கோடை மழையினால் வெப்பத்தின் தாக்கம் குறைந்தது
/
கோடை மழையினால் வெப்பத்தின் தாக்கம் குறைந்தது
ADDED : ஏப் 22, 2024 01:35 AM

கூடலுார்;கூடலுாரில் பெய்த கோடை மழையை தொடர்ந்து, வெப்பத்தின் தாக்கம் சற்று குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கூடலுார் பகுதியில் நடப்பு ஆண்டு துவக்கம் முதல், கோடை மழை ஏமாற்றி வந்தது. வனப்பகுதியில் ஏற்பட்ட வறட்சியினால் வனவிலங்குகளுக்கு உணவு, குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
நீர் ஆதாரங்கள் நீர்வரத்து குறைந்து, மக்களுக்கும் குடிநீர் தட்டுப்பாடு அதிகரிக்கும் சூழலும் ஏற்பட்டுள்ளது. வெப்பத்தின் தாக்கத்தால் மக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வந்தனர்.
இந்நிலையில், கூடலுாரின் பல பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை, 4:45 முதல் 5:00 மணி வரை இடியுடன் மிதமான கோடை மழை பெய்தது. வெப்பத்தின் தாக்கம் சற்று குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
விவசாயிகள் கூறுகையில், 'கடந்த ஆண்டு எதிர்பார்த்த பருவமழை பெய்யாத நிலையில், நடப்பாண்டு கோடை மழையும் தொடர்ந்து ஏமாற்றி வந்தது. இந்நிலையில், கோடை மழை தொடர்ந்து சில நாட்கள் பெய்தால் விவசாயத்துக்கு பயன் ஏற்படும்,' என்றனர்.

