நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார்;கூடலுார் நாடுகாணி அருகே, கோழிக்கோடு சாலையில் இருந்து, பொன்னுார் கிராம சாலை பிரிந்து செல்கிறது. இச்சாலையை அப்பகுதி மக்கள் மட்டுமின்றி, அங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மாணவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இச்சாலை பல இடங்களில் சேதமடைந்து, வாகனங்கள் இயக்கவும் மாணவர்கள் நடந்து செல்லவும் சிரமப்பட்டு வருகின்றனர். பல ஆண்டுகளாக சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்க வலியுறுத்தியும், நடவடிக்கை இல்லாததால், கிராம மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
கிராம மக்கள் கூறுகையில், 'பொன்னுார் கிராம சாலையை கிராம மக்கள் மட்டுமின்றி பள்ளி மாணவர்களும் பயன்படுத்தி வருகின்றனர். சாலை சேதமடைந்து பல ஆண்டுகளாகியும் சீரமைக்க நடவடிக்கை இல்லை. மழை தீவிரமடையும் முன்பு சாலையை சீரமைக்க வேண்டும்,' என்றனர்.

