sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

சுற்றுலா பயணியருக்கு வனத்துறை எச்சரிக்கை

/

சுற்றுலா பயணியருக்கு வனத்துறை எச்சரிக்கை

சுற்றுலா பயணியருக்கு வனத்துறை எச்சரிக்கை

சுற்றுலா பயணியருக்கு வனத்துறை எச்சரிக்கை


ADDED : மார் 24, 2024 02:26 AM

Google News

ADDED : மார் 24, 2024 02:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலூர்:நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் வறட்சி அதிகரித்துள்ளது. வன விலங்குகள் உணவு, குடிநீர் தேடி இடம் பெயர்ந்து வருகின்றன. முதுமலையில் முக்கிய நீராதாரமான மாயார் ஆற்றை நோக்கி யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் வர துவங்கியுள்ளன.

இங்கு வரும் வன விலங்குகள் மைசூரு தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் அவ்வப்போது மேய்ச்சலில் ஈடுபட்டு வருகின்றன. குடிநீருக்காக அடிக்கடி சாலையை கடந்து செல்கின்றன.

வனத்துறையினர் கூறுகையில், 'யானை, காட்டெருமை உள்ளிட்ட விலங்குகள் தாக்கும் அபாயம் உள்ளதால், முதுமலை வழியாக பயணிக்கும் பயணியர், வாகன ஓட்டுனர்கள், வன விலங்குகள் அருகே வாகனங்களை நிறுத்தி இடையூறு ஏற்படுத்தக் கூடாது.

'இருசக்கர வாகனத்தில் பயணிப்பவர்கள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும். யானைகள் சாலை ஓரங்களில் மேய்ச்சலில் ஈடுபடும் போது காத்திருந்து செல்வது பாதுகாப்பானது. மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.






      Dinamalar
      Follow us