/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குடிநீர் குழாய் உடைப்பைசரி செய்த ஊழியர்கள்
/
குடிநீர் குழாய் உடைப்பைசரி செய்த ஊழியர்கள்
ADDED : ஏப் 23, 2024 10:29 PM
சூலுார் : சிந்தாமணி புதூரில் பில்லுார் குடிநீர் பிரதான குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
சூலுார் அடுத்த சிந்தாமணி புதூரில் திருச்சி ரோட்டில் பில்லுார் குடிநீர் திட்ட பிரதான குழாய் செல்கிறது. கடந்த இரு நாட்களுக்கு முன் அங்குள்ள திருமண மண்டபம் எதிரில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாக வெளியேறி ரோட்டில் ஓடியது. அதனால், சுற்று வட்டார பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளுக்கு குடிநீர் சப்ளை பாதிக்கப்பட்டது.
இதுகுறித்த செய்தி படத்துடன், 'தினமலர்' நாளிதழில் நேற்று முன்தினம் வெளியானது. அதன் எதிரொலியாக குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் அங்கு வந்து, குழாய் உடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
அடிக்கடி குழாய் உடைப்பு ஏற்படுவதை தவிர்க்க, பிரதான குழாயை ரோட்டின் ஓரத்தில் மாற்றி அமைக்க வேண்டும், என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

