/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
செல்லாண்டியம்மன் கோவில் கும்பாபிஷேகம்; திரளான பக்தர்கள் பங்கேற்பு
/
செல்லாண்டியம்மன் கோவில் கும்பாபிஷேகம்; திரளான பக்தர்கள் பங்கேற்பு
செல்லாண்டியம்மன் கோவில் கும்பாபிஷேகம்; திரளான பக்தர்கள் பங்கேற்பு
செல்லாண்டியம்மன் கோவில் கும்பாபிஷேகம்; திரளான பக்தர்கள் பங்கேற்பு
ADDED : செப் 15, 2024 11:32 PM

குன்னுார் : குன்னுார் ஓட்டுப்பட்டறை செல்லாண்டியம்மன் கோவிலில், அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடந்தது.
குன்னுார் ஓட்டுப்பட்டறை பகுதியில் அமைந்துள்ள செல்லாண்டியம்மன் கோவிலில் புனரமைப்பு பணிகள் நடந்தன. கடந்த, 13ம் தேதி கணபதி ஹோமம், யாக பூஜைகளுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது.
நேற்று காலை, 8:30 மணிக்கு மங்கள இசை, நான்காம் கால யாக பூஜை துவக்கம், நாடிசந்தானம், ஸ்பர்சாகுதி, மஹா தீபாராதனை, யாத்ரா தானம் நடந்தது. தொடர்ந்து, கடம் புறப்பாடு, வலம் வருதல் காலை, 10:55 மணிக்கு விமானம் கலசம் மகா கும்பாபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து, பரிவார தேவதைகளுக்கும், மஹாசக்தி செல்லாண்டியம்மனுக்கும் மகா கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தின் போது, 'ஓம் செல்லாண்டியம்மன் தாயே போற்றி' என கோஷம் எழுப்பி பக்தர்கள் பக்தி பரவசத்துடன் வழிபட்டனர்.
விழாவில் குழந்தைகள், சிறுவர், சிறுமியரின் பரத நாட்டியம் நடந்தது. மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், பக்தர்கள் செய்திருந்தனர்.

