sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 15, 2025 ,கார்த்திகை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

மூன்று தொகுதியில் 10 இயந்திரங்கள் மக்கர்: தாமதமாக துவங்கிய ஓட்டுப்பதிவு

/

மூன்று தொகுதியில் 10 இயந்திரங்கள் மக்கர்: தாமதமாக துவங்கிய ஓட்டுப்பதிவு

மூன்று தொகுதியில் 10 இயந்திரங்கள் மக்கர்: தாமதமாக துவங்கிய ஓட்டுப்பதிவு

மூன்று தொகுதியில் 10 இயந்திரங்கள் மக்கர்: தாமதமாக துவங்கிய ஓட்டுப்பதிவு


ADDED : ஏப் 20, 2024 12:31 AM

Google News

ADDED : ஏப் 20, 2024 12:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி;மின்னணு இயந்திரங்கள் பழுதால், 10 ஓட்டு சாவடிகளில் தாமதமாக ஓட்டுப்பதிவு துவங்கியது.

நீலகிரி லோக்சபா தொகுதியில் ஓட்டு சாவடிகளுக்கு தேவையான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் ஏற்கனவே போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த ஓட்டுசாவடி மையங்களுக்கு அனுப்பப்பட்டிருந்தன.

இந்நிலையில், நேற்று காலை ஓட்டுப்பதிவு தயாரான போது, 10 இடங்களில் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பழுதானது. இதனால், மாற்று ஏற்பாடாக ரிசர்வில் தயாராக வைத்திருந்த இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டு ஓட்டுப்பதிவு தொடங்கியது.

இதன்படி, ஊட்டி அடுத்த மஞ்சூர் அருகில் உள்ள கரியமலை ஓட்டு சாவடியில் ஒரு மணி நேரம் தாமதமாக வாக்கு பதிவு தொடங்கியது. ஊட்டி பிங்கர் போஸ்ட் நிர்மலா பள்ளி, தேவாலா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட உப்பட்டி பாரத் மாதா பள்ளியில் அரைமணி நேரம் தாமதமாக ஓட்டு பதிவு தொடங்கியது. பைகமந்து ஓட்டுசாவடியில் பேட்டரி பிரச்னையில், 89 ஓட்டுக்கள் பதிவான நிலையில் திடீரென பழுதானது. பின், மண்டல அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பேட்டரி மாற்றப்பட்டு இயந்திரம் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. மூன்று தொகுதிகளில் 10 இயந்திரங்கள் மக்கராகி தாமதமாக ஓட்டுப்பதிவு துவங்கியது.






      Dinamalar
      Follow us