/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஒரே நாளில் மனுக்களுக்கு தீர்வு 43 பயனாளிகளுக்கு நலத்திட்டம்
/
ஒரே நாளில் மனுக்களுக்கு தீர்வு 43 பயனாளிகளுக்கு நலத்திட்டம்
ஒரே நாளில் மனுக்களுக்கு தீர்வு 43 பயனாளிகளுக்கு நலத்திட்டம்
ஒரே நாளில் மனுக்களுக்கு தீர்வு 43 பயனாளிகளுக்கு நலத்திட்டம்
ADDED : நவ 24, 2024 03:11 AM
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை யூனியன், முள்ளுக்குறிச்சி அரசு பழங்குடி-யினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், தேசிய தொல்குடியினர் தினத்தையொட்டி சிறப்பு முகாம் நடந்தது. தேசிய தொல்குடி-யினர் தினம், 2024-ஐ முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு போட்-டிகளில் வெற்றி பெற்ற, 164 பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு அமைச்சர் மதிவேந்தன் பரிசுகளை வழங்கி பேசியதாவது:
தமிழக முதல்வர் ஸ்டாலின், பழங்குடியின மக்களின் கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த தனி கவனம் செலுத்தி வருகிறார். ஒவ்வொரு ஆண்டும், 300 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரு-கிறார்.தேசிய தொல்குடியினர் தினத்தை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் ஆதார் அட்டை உள்ளிட்ட அத்தியாவசிய ஆவ-ணங்கள் வழங்கும் முகாம் நடத்தப்பட்டது. இம்முகாம்களில், 750 மனுக்கள் பெறப்பட்டு, 100-க்கும் மேற்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 43 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இவ்வாறு அவர் பேசினார்.

