/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வாகனம் மோதி விபத்து; வடமாநில தொழிலாளி பலி
/
வாகனம் மோதி விபத்து; வடமாநில தொழிலாளி பலி
ADDED : ஜூலை 13, 2024 08:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாமக்கல்: பீஹார் மாநிலத்தை சேர்ந்தவர் பர்த்துான் மாஜி, 38.
இவர், நாமக்-கல்லில் தங்கி கூலிவேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, 10:30 மணிக்கு, முதலைப்பட்டி பகுதியில், சேலம் - கரூர் புறவழிச்சாலையை நடந்து சென்று கடக்க முயன்றார். அப்போது, அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம், பர்த்துான் மாஜி மீது மோதிவிட்டு சென்றுவிட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அவரை, அக்கம் பக்கத்தில் இருந்த-வர்கள் மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவம-னைக்கு கொண்டு சென்றனர். அங்கு, பரிசோதனை செய்த டாக்-டர்கள், பர்த்துான் மாஜி இறந்து விட்டதாக கூறினர். நல்லிபா-ளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

