sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 18, 2025 ,மார்கழி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

3ம் நாளாக தொடரும் 'ஸ்டிரைக்' டிபாசிட் தொகை பெற வழியின்றி வாடிக்கையாளர் அவதி

/

3ம் நாளாக தொடரும் 'ஸ்டிரைக்' டிபாசிட் தொகை பெற வழியின்றி வாடிக்கையாளர் அவதி

3ம் நாளாக தொடரும் 'ஸ்டிரைக்' டிபாசிட் தொகை பெற வழியின்றி வாடிக்கையாளர் அவதி

3ம் நாளாக தொடரும் 'ஸ்டிரைக்' டிபாசிட் தொகை பெற வழியின்றி வாடிக்கையாளர் அவதி


ADDED : அக் 24, 2024 01:17 AM

Google News

ADDED : அக் 24, 2024 01:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல், அக். 24-

தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தினரின் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டம், 3ம் நாளாக தொடர்வதால், டிபாசிட் தொகை பெறவும், வரவு செலவு செய்ய முடியாமலும் வாடிக்கையாளர்கள் பரிதவிக்கின்றனர்.

தமிழகம் முழுவதும், 30,000க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. அவற்றில், 20,000க்கும் அதிகமான கடைகள், கிராமப்புறங்களில், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் நகர கூட்டுறவு கடன் சங்கங்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த ரேஷன் கடைகளில், 25,000க்கும் மேற்பட்ட பணியாளர்கள், கட்டுனர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களின் பல்வேறு கோரிக்கையை, அரசு இதுவரை நிறைவேற்றவில்லை.

அதன்படி, அரிசி, கோதுமை, துவரம் பருப்பு, பாமாயில் போன்ற குடிமைப்பொருட்களின் இருப்பு குறைவு, அதிகம் மற்றும் போலி பில் கண்டறியப்பட்டால், தொடர்புடைய பணியாளர்களிடம் ஏற்கனவே நடைமுறையில் இருந்து வந்த அபராத தொகையை, இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. அவற்றை ரத்து செய்ய வேண்டும். ரேஷன் கடைகளில் கட்டுப்பாடற்ற பொருட்களை விற்பனை செய்ய கட்டாப்படுத்துகின்றனர். காலாவதியான பொருட்களுக்கு, சம்பந்தப்பட்ட விற்பனையாளரிடம் வசூல் செய்யப்படுகிறது.

தமிழகம் முழுவதும், கடந்த காலத்தில் மாவட்ட தேர்வாணையம் மூலம் நியமனம் செய்யப்பட்ட விற்பனையாளர்கள், 100 கி.மீ., தள்ளி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். புதிதாக விற்பனையாளர்களை தேர்வு செய்வதற்கு முன், அருகில் உள்ள ரேஷன் கடைக்கு பணியிட மாறுதல் செய்து, காலிப்பணியிடம் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த கோரிக்கைகளை இதுவரை அரசு நிறைவேற்றாததால், தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில், தமிழகம் முழுவதும் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர். இப்போராட்டம், நேற்று மூன்றாம் நாளாக நீடித்தது. அதன் காரணமாக, வங்கியில், டிபாசிட் தொகை பெற வழியின்றியும், வரவு-செலவு மேற்கொள்ள முடியாமலும், வாடிக்கையாளர்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

'அதனால், இப்பிரச்னையை முடித்து வைக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us