/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமக்கல் குற்றவியல் வக்கீல் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா
/
நாமக்கல் குற்றவியல் வக்கீல் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா
நாமக்கல் குற்றவியல் வக்கீல் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா
நாமக்கல் குற்றவியல் வக்கீல் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா
ADDED : டிச 22, 2025 08:33 AM
நாமக்கல்: நாமக்கல் குற்றவியல் வக்கீல்கள் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா, நேற்று நடந்தது. விழாவுக்கு, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல் சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச்செயலாளரும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் கவுரவ செயலாளருமான வக்கீல் அய்-யாவு தலைமை வகித்தார். சங்க புதிய தலைவ-ராக பாலசுப்ரமணியன், செயலாளராக ராஜரத்-தினம், பொருளாளராக அய்யப்பன் மற்றும் நிர்வா-கிகள் பொறுப்பேற்றுக்கொண்டனர்.
புதிய நிர்வாகிகளை எம்.பி.,க்கள் ராஜேஸ்குமார், மாதேஸ்வரன், எம்.எல்.ஏ., ராமலிங்கம், முன்னாள் மத்திய அமைச்சர் காந்திசெல்வன், அ.தி.மு.க., வர்த்தக அணி மாநில இணை செய-லாளர் மோகன், பா.ஜ., கிழக்கு மாவட்ட தலைவர் சரவணன் மற்றும் சங்க நிர்வாகிகள் வாழ்த்தி பேசினர். கூட்டமைப்பு பொதுச்செயலாளர் அய்-யாவு பேசுகையில், ''நீதிமன்றங்களில் உள்கட்ட-மைப்பு வசதிகள் கொண்டு வந்த பின், இ-பைலிங் வசதியை கொண்டு வரவேண்டும்,'' என்றார்.

