/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அடையாள அட்டை எண் விவசாயிகளுக்கு அழைப்பு
/
அடையாள அட்டை எண் விவசாயிகளுக்கு அழைப்பு
ADDED : டிச 24, 2025 07:50 AM
நாமக்கல்: 'விவசாய அடையாள எண் பெறாதவர்கள், வரும், 28க்குள் பெற்-றுக்கொள்ள வேண்டும்' என, நாமக்கல் கலெக்டர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
ஒவ்வொரு விவசாயிக்கும், தனித்துவ அடையாள அட்டை எண் என்பது, இனி வருங்காலங்களில் அத்தியாவசியமான ஒன்று. மத்-திய, மாநில அரசு திட்டங்களில் பயன்பெற வேண்டும் என்றால், விவசாய அடையாள எண் கண்டிப்பாக தேவை. மேலும், 22-வது பிரதம மந்திரி கவுரவ தொகை பெறுவதற்கும், பயிர் காப்பீட்டு தொகை பெறுவதற்கும், கண்டிப்பாக விவசாய அடையாள எண் தேவை.
அதனால், நாமக்கல் மாவட்டத்தில், பிரதம மந்திரி கவுரவ தொகை, 21வது தவணை வரை பெற்ற, 9,372 விவசாயிகள், இதுவரை விவசாயி தனித்துவ அடையாள அட்டை எண் பெறாமல் உள்ளனர். விவசாய அடையாள எண் பெறாத விவசா-யிகள் அனைவரும், தங்களுக்கு அருகாமையில் உள்ள கணினி சேவை மையத்திலோ அல்லது வட்டார வேளாண், தோட்டக்-கலை அலுவலகங்களுக்கு சென்று, தங்கள் ஆதார் மற்றும் மொபைல் போனுடன், பட்டா விபரங்களுடனும் சென்று, வரும், 28க்குள் விவசாய அடையாள எண் பெற்றுக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

