sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாமக்கல்

/

அறுந்து விழுந்த நாமக்கல் பசுமை பந்தல்

/

அறுந்து விழுந்த நாமக்கல் பசுமை பந்தல்

அறுந்து விழுந்த நாமக்கல் பசுமை பந்தல்

அறுந்து விழுந்த நாமக்கல் பசுமை பந்தல்


ADDED : மே 17, 2024 02:26 AM

Google News

ADDED : மே 17, 2024 02:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: வாகன ஓட்டிகளின் வசதிக்காக, நாமக்கல் நகராட்சி சார்பில், அமைக்கப்பட்ட பசுமை பந்தல் அறுந்து விழுந்தது.

நாமக்கல்லில், கோடை வெப்பத்தால் மக்கள், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வந்தனர். மேலும் போக்குவரத்து சிக்னலில், பல நிமிடங்கள் காத்திருக்கும் வாகன ஓட்டிகள், கொளுத்தும் வெப்பத்தால் அவதிக்கு ஆளாகினர். அதை தவிர்க்கும் வகையில் முதற்கட்டமாக, திருச்செங்கோடு சாலை, சேலம் சாலை, கோட்டை சாலை, மோகனுார் சாலை, துறையூர் சாலை, நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் அருகே ஆகிய போக்குவரத்து சிக்னல் பகுதிகளில், நகராட்சி சார்பில், பசுமை நிழல் பந்தல் அமைக்க முடிவு செய்யப்பட்டு கடந்த, 7ல் பசுமை பந்தல் அமைக்கப்பட்டது.

சிக்னலில் போது, வாகன ஓட்டிகள் அதன் நிழலில் காத்திருந்து சென்றனர். இந்நிலையில் பஸ் ஸ்டாண்ட் அருகே, நெஞ்சாலைத்துறை அலுவலகம் எதிரிலுள்ள சிக்னலில், அமைக்கப்பட்ட பந்தல் நேற்று காலை அறுந்து விழுந்தது. அதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். அறுந்து தொங்கிக்கொண்டிருந்த பச்சை வலைத்

துணியை, சிலர் சாலையோர பந்தலில் இழுத்து கட்டி சென்றனர்.






      Dinamalar
      Follow us