sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நாகப்பட்டினம்

/

இளைஞர்களிடம் ஆன்மிக பற்றை உருவாக்க வேண்டும்: அண்ணாமலை பா.ஜ., அண்ணாமலை பேச்சு

/

இளைஞர்களிடம் ஆன்மிக பற்றை உருவாக்க வேண்டும்: அண்ணாமலை பா.ஜ., அண்ணாமலை பேச்சு

இளைஞர்களிடம் ஆன்மிக பற்றை உருவாக்க வேண்டும்: அண்ணாமலை பா.ஜ., அண்ணாமலை பேச்சு

இளைஞர்களிடம் ஆன்மிக பற்றை உருவாக்க வேண்டும்: அண்ணாமலை பா.ஜ., அண்ணாமலை பேச்சு


ADDED : ஆக 25, 2025 01:53 AM

Google News

ADDED : ஆக 25, 2025 01:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாகப்பட்டினம்: ''இளைஞர்களிடம் ஆன்மிக பற்றை உருவாக்க வேண்டும்'' என, பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.

நாகையில், சின்மயா மிஷன் சார்பில், 50 கோவில்களின் திருப்பணி நிறைவு விழா மற்றும் பகவத் கீதை பாராயண நிகழ்ச்சி, ராமகிருஷ்ணானந்தா ஆச்சார்யா தலைமையில் நேற்று மாலை நடந்தது. இதில் பங்கேற்ற பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது:

முன்னோர்கள் கிராமத்தில் அறுவடை செய்யும் விளை பொருட்களை கிராம கோவிலுக்கு, கோவிலை பராமரிப்பவர்களுக்கு, விவசாயிக்கு, சேமிப்பு, இல்லாதவர்களுக்கு உள்ளிட்ட ஆறு வகையாக பிரித்து வைப்பார்கள். அப்போது ஜாதிகள் கிடையாது.

200 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர்கள் வந்த பின் நடைமுறைகள் உடைக்கப்பட்டது. வரி போட்டு வசூலித்தனர். அதன் பின் ஜாதி உருவானது.

கடந்த 200 ஆண்டுகளில் ஹிந்து தர்மத்திற்கு எண்ணற்ற சோதனைகள் வந்துள்ளது. எல்லா மதமும் சம்மதம் என்பது ஹிந்து மதம். ஹிந்து மதம் என்பது வாழ்வியல் முறை. மதத்திற்கெல்லாம் தாய் மதம் ஹிந்து மதம்.

பிரதமர், கங்கைகொண்டசோழபுரம் வந்தபோது, சின்மயா மிஷன் சார்பில் தமிழில் மொழி பெயர்த்த கீதையை வெளியிட்டார். தாய் மொழியில் கீதையை படிக்கும்போது தனி சக்தி கிடைக்கிறது.

ஹிந்து மத குருக்கள் மக்களிடம் பேச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அப்போதுதான் கிராம மக்களிடம் மதத்தை பற்றிய புரிதல் கிடைக்கும். ஆன்மிக பற்றை இளைஞர்களிடம் உருவாக்க வேண்டும்.

நாம் எந்த வேலை செய்தாலும் எதிர்பார்ப்பு இருக்கக் கூடாது. சில இடங்களில் நாம் கீழேயும், சில இடங்களில் மேலேயும் உட்காரும் நிலை வரும். கீழே உட்கார்ந்திருப்பவர் நாளை மேலே வரலாம். மேலே இருப்பவர்கள் நாளை கடைசியில் அமரும் நிலை ஏற்படலாம்.

நாம் எங்கு அமர்ந்திருந்தாலும் அமரும் இடம் முக்கியமில்லை. நமது வேலையை நாம் சரியாக செய்ய வேண்டும். எதையும் எதிர்பார்க்காமல், வேலையின் மீது மட் டுமே பற்று இருக்க வேண்டும். இதுதான் கர்மா.

இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us