sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மயிலாடுதுறை

/

விடுவிக்க லஞ்சம் கேட்ட போலீஸ்காரர் 'சஸ்பெண்ட்'

/

விடுவிக்க லஞ்சம் கேட்ட போலீஸ்காரர் 'சஸ்பெண்ட்'

விடுவிக்க லஞ்சம் கேட்ட போலீஸ்காரர் 'சஸ்பெண்ட்'

விடுவிக்க லஞ்சம் கேட்ட போலீஸ்காரர் 'சஸ்பெண்ட்'


ADDED : பிப் 07, 2024 01:07 AM

Google News

ADDED : பிப் 07, 2024 01:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மயிலாடுதுறை:மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த மங்கைமடம் காந்திநகரை சேர்ந்தவர் செல்லப்பன் மகன் பிரவீன்ராஜ், 35. இவர், கடந்த 20ம் தேதி தன் பைக்கில் சட்டநாதபுரம் அருகே சென்றார். அப்போது, எதிரே வந்த மாதானம் குருவியம்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த சங்கரின் பைக் நேருக்கு நேர் மோதியது.

இதுகுறித்து பிரவின்ராஜ் அளித்த புகாரின்படி, சீர்காழி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். இதை அறிந்த கூடுதல் எஸ்.பி., தலைமையிலான தனிப்படை போலீஸ்காரர் பிரபாகரன், சங்கரை தொடர்பு கொண்டு, 5,000 ரூபாய் கொடுத்தால் வழக்கில் இருந்து விடுவித்து விடுவதாக கூறினார்.

இந்த உரையாடல் ஆடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதை தொடர்ந்து, பிரபாகரன் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.

இந்நிலையில் பிரபாகரனை 'சஸ்பெண்ட்' செய்து எஸ்.பி., மீனா உத்தரவிட்டுள்ளார்.

சஸ்பெண்ட் செய்யப்பட்ட பிரபாகரன், கடந்த குடியரசு தினவிழாவில் சிறப்பாக பணியாற்றியதற்கான நற்சான்றிதழ் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us