sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 08, 2026 ,மார்கழி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

திருமணத்தை நிறுத்தி மாணவி படிக்க உதவிய கலெக்டர்

/

திருமணத்தை நிறுத்தி மாணவி படிக்க உதவிய கலெக்டர்

திருமணத்தை நிறுத்தி மாணவி படிக்க உதவிய கலெக்டர்

திருமணத்தை நிறுத்தி மாணவி படிக்க உதவிய கலெக்டர்


ADDED : அக் 17, 2024 05:46 AM

Google News

ADDED : அக் 17, 2024 05:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமங்கலம்: 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்டத்தில் திருமங்கலம் கோர்ட் வளாகம், தாலுகா அலுவலகம், சிறை வளாகம், பஸ் ஸ்டாண்ட், அறிவு சார் மையம் பகுதிகளில் கலெக்டர் சங்கீதா நேற்று ஆய்வு செய்தார்.

தொடர்ந்து திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மதிய உணவு திட்டத்தையும் ஆய்வு செய்தார். அங்கு 11ம் வகுப்பு படிக்கும் கள்ளிக்குடி பகுதி மாணவி, 'எனக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளது. திருமணத்தில் விருப்பம் இல்லை. நான் கல்வியை தொடர வேண்டும் என விரும்புகிறேன். அதற்கு உதவி செய்ய வேண்டும்' என கலெக்டரிடம் கோரிக்கை விடுத்தார்.

திருமங்கலம் மகளிர் போலீசாரை அழைத்த கலெக்டர் சங்கீதா, ''இதுகுறித்து மாணவியின் பெற்றோரிடம் பேசி நடவடிக்கை எடுங்கள்'' என உத்தரவிட்டார்.

மாணவியின் பெற்றோரை அழைத்த போலீசார் அவர்களிடம் மாணவியின் கோரிக்கை குறித்து தெரிவித்தனர். 'கிராமப் பகுதியில் தொடர்ந்து பெண் கேட்டு வருவதாகவும், அதனால் அது குறித்து பேசியதாகவும், 18 வயது முடிந்த பின்னரே திருமணம் செய்வோம்' எனவும் பெற்றோர் உறுதியளித்தனர். அதனை எழுதி வாங்கிய போலீசார், கலெக்டரிடம் தகவல் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us