/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நான்காம் நாளாக வருவாய் அலுவலக பணிகள் பாதிப்பு
/
நான்காம் நாளாக வருவாய் அலுவலக பணிகள் பாதிப்பு
ADDED : மார் 02, 2024 04:11 AM
மதுரை : மதுரை மாவட்டத்தில் வருவாய் அலுவலர்களின் வேலை நிறுத்தத்தால் கலெக்டர், தாலுகா அலுவலகங்களில் பணிகள் பாதித்துள்ளன.
வருவாய்த்துறையில் பதவி உயர்வு பட்டியல்கள் திருத்தத்தின் காரணமாக பணியிறக்கம் பெற்ற அலுவலர்களின் பணிபாதுகாப்பு அரசாணை, 10 மாதங்களுக்கும் மேலாக காலதாமதம் செய்யப்படுகிறது. வருவாய் அலுவலர்களுக்கு மேம்படுத்தப்பட்ட, சிறப்பு தனி ஊதியம் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக 4 நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பொது வினியோகம், தாலுகா, கலெக்டர் அலுவலக பணிகளுக்காக வரும் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
நேற்று வருவாய் அலுவலர்கள் கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர். மாவட்ட தலைவர் கோபி தலைமை வகித்தார். செயலாளர் முகைதீன் அப்துல்காதர், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் நீதிராஜா உட்பட பலர் பேசினர். மாவட்ட துணைத் தலைவர் இங்கர்சால் நன்றி கூறினார். மத்திய செயற்குழு உறுப்பினர் ராம்குமார், மாவட்ட நிர்வாகிகள் சுரேஷ் பிரடரிக் கிளமென்ட், செந்தில் வள்ளி உட்பட பலர் பங்கேற்றனர்.

