நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான்: சோழவந்தான் ஜெனகை நாராயண பெருமாள் கோயிலில் சன்மார்க்க கூட்டம் நடந்தது. தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார்.
செயலாளர் நாகையா முன்னிலை வகித்தார். மாணிக்கம் அருள் விளக்கேற்றினார். அகவல் பாராயணம் படிக்கப்பட்டது. அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை எனும் தலைப்பில் பகவதி சொற்பொழிவாற்றினார். சந்திரசேகர் வள்ளலார் பாடல்களை பாடினார். ஜோதி வழிபாடு நடந்தது. நிர்வாகி பாண்டி நன்றி கூறினார். மல்லிகா,ராஜா குடும்பத்தினர் அன்னதானம் வழங்கினர்.