ADDED : நவ 27, 2025 05:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை மேலுார் தனியா மங்கலத்தைச் சேர்ந்தவர் குமரேசன் 42. ஆந்திராவில் இருந்து ஒரு வாகனத்தில் 130 கிலோ கஞ்சாவை கடத்தி வந்தபோது, தேனி - பெரியகுளம் ரோடு மதுராபுரியில் போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் 2017 ல் கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் சிறப்பு தடுப்பு பிரிவு நீதிமன்றத்தில் நடந்தது.
இதில் குமரேசனுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.3 லட்சம் விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.

