sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

'போலாம் ரைட்...' நிற்காத பஸ்கள் பரிதவிக்கும் நாவினிப்பட்டி

/

'போலாம் ரைட்...' நிற்காத பஸ்கள் பரிதவிக்கும் நாவினிப்பட்டி

'போலாம் ரைட்...' நிற்காத பஸ்கள் பரிதவிக்கும் நாவினிப்பட்டி

'போலாம் ரைட்...' நிற்காத பஸ்கள் பரிதவிக்கும் நாவினிப்பட்டி


ADDED : அக் 25, 2024 05:35 AM

Google News

ADDED : அக் 25, 2024 05:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேலுார்: நாவினிபட்டியில் அரசு பஸ்களை நிறுத்த மேலாளர் உத்தரவிட்டும் டிரைவர்கள் நிறுத்த மறுப்பதால் பொது மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

மேலுாரில் இருந்து காரைக்குடி, தஞ்சாவூர் பகுதிகளுக்கு நாவினிப்பட்டியை கடந்து செல்ல வேண்டும். இவ்வூரில் பஸ்களை நிறுத்த டிரைவர்கள் மறுக்கின்றனர். இதுகுறித்து பயணிகள் கேட்கும்போது கடுமையான வார்த்தைகளால் டிரைவர், கண்டக்டர்கள் பதில் கூறுகின்றனர்.

சமூக ஆர்வலர் சம்சுதீன்: இங்கு பஸ்களை நிறுத்த கும்பகோண கோட்ட மேலாளர் 2019ல் உத்தரவிட்டுள்ளார். அதை அனைத்து கிளை மேலாளர்களுக்கும் அனுப்பியுள்ளார். இருந்தபோதிலும் டிரைவர்கள் நிறுத்த மறுக்கின்றனர்.

நாவினிபட்டியை சேர்ந்தவர்களை நிறுத்தத்திற்கு அப்பால் 4 கி.மீ., தொலைவில் உள்ள மேலுாரில் இறக்கி விடுகின்றனர்.

அதனால் பயணிகள் ஆட்டோ பிடித்து வரவேண்டியுள்ளது என்றார்.

கோட்ட மேலாளர் நாகராஜன் கூறுகையில், நாவினிபட்டியில் பயணிகளை இறக்கிவிட மறுக்கும் டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.






      Dinamalar
      Follow us