sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

பாண்டியன், ராக்போர்ட் ரயில்கள் எழும்பூரில் இருந்தே இயக்கப்படும்

/

பாண்டியன், ராக்போர்ட் ரயில்கள் எழும்பூரில் இருந்தே இயக்கப்படும்

பாண்டியன், ராக்போர்ட் ரயில்கள் எழும்பூரில் இருந்தே இயக்கப்படும்

பாண்டியன், ராக்போர்ட் ரயில்கள் எழும்பூரில் இருந்தே இயக்கப்படும்


ADDED : செப் 11, 2025 11:28 PM

Google News

ADDED : செப் 11, 2025 11:28 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: சென்னை எழும்பூர் ஸ்டேஷனில் நடைபெறும் பராமரிப்பு பணியால் பாண்டியன், ராக்போர்ட் உள்ளிட்ட ரயில்கள் தற்காலிகமாக தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் என முன்பு அறிவிக்கப்பட்ட நிலையில், பயணிகள் வசதிக்காக எழும்பூரில் இருந்தே வழக்கம்போல் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

அதன்படி, செப்.,17 முதல், மதுரை - எழும்பூர் 'பாண்டியன்' ரயில் (12638), எழும்பூர் வரை செல்லும். மறுமார்க்கத்தில் வழக்கம்போல் எழும்பூரில் இருந்தே புறப்படும். திருச்சி - எழும்பூர் - திருச்சி 'ராக்போர்ட்' ரயில் (12653/12654), செப்.,18 முதல் எழும்பூர் - திருச்சி 'சோழன்' ரயில் (22675), எழும்பூரில் இருந்து வழக்கம்போல் இயங்கும்.

தாம்பரத்தில் இருந்து...

* செப்.,17 முதல் நவ.,9 வரை, மதுரை வழியாக இயங்கும் கொல்லம் - எழும்பூர் 'அனந்தபுரி' ரயில் (20636), அதிகாலை 5:20 மணிக்கு தாம்பரத்துடன் நிறுத்தப்படும். மறுமார்க்கத்தில் ரயில் (20635), செப்., 18 முதல் நவ., 10 வரை இரவு 8:20 மணிக்கு தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும்.

* செப்.,11 முதல் நவ.,10 வரை எழும்பூர் - ராமேஸ்வரம் ரயில் (22661), மாலை 6:20 மணிக்கு தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும். மறுமார்க்கத்தில் ரயில் (22662), செப்.,10 முதல் நவ.,9 வரை காலை 6:35 மணிக்கு தாம்பரத்துடன் நிறுத்தப்படும்.

* செப்.,11 முதல் நவ., 10 வரை சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம் ரயில் (16751), இரவு 7:42 மணிக்கு தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும். மறுமார்க்கத்தில் ரயில் (16752), செப்.,10 முதல் நவ.,9 வரை காலை 6:45 மணிக்கு தாம்பரத்துடன் நிறுத்தப்படும்.

ஈரோடு - செங்கோட்டைரயில் இன்று பகுதியாக ரத்து

ஈரோடு - கரூர் இடையே நடைபெறும் பராமரிப்பு பணி காரணமாக இன்று ஒருநாள்(செப். 12), ஈரோடு - செங்கோட்டை- ஈரோடு ரயில்கள் (16845/16846), திண்டுக்கல் - கரூர் இடையே மட்டும் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கரூர் - ஈரோடு இடையே பகுதி ரத்து செய்யப்படுகின்றன. ஏற்கனவே மேற்கண்ட ரயில்கள் செப். 30 வரை (செவ்வாய் தவிர்த்து) செங்கோட்டை - திண்டுக்கல் இடையே ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளன.








      Dinamalar
      Follow us