sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 17, 2025 ,கார்த்திகை 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

கோயிலைச்சுற்றி வணிக வளாகம் அமைக்க தடை கோரி வழக்கு தற்போதைய நிலை தொடர உத்தரவு

/

கோயிலைச்சுற்றி வணிக வளாகம் அமைக்க தடை கோரி வழக்கு தற்போதைய நிலை தொடர உத்தரவு

கோயிலைச்சுற்றி வணிக வளாகம் அமைக்க தடை கோரி வழக்கு தற்போதைய நிலை தொடர உத்தரவு

கோயிலைச்சுற்றி வணிக வளாகம் அமைக்க தடை கோரி வழக்கு தற்போதைய நிலை தொடர உத்தரவு


ADDED : நவ 11, 2025 05:01 AM

Google News

ADDED : நவ 11, 2025 05:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லுார் பால்வண்ணநாதர் சுவாமி கோயிலைச் சுற்றிலும் வணிக வளாகம் அமைக்க தடை கோரிய வழக்கில் தற்போதைய நிலை தொடர உத்தரவிட்டது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.

பா.ஜ., ஆன்மிகம், கோயில் மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் சண்முகசுந்தரம் தாக்கல் செய்த பொதுநல மனு: கரிவலம்வந்தநல்லுார் பால்வண்ணநாதர் சுவாமி கோயில் பாண்டிய மன்னர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. இது அக்னி ஸ்தலம். இதன் சுற்றுச்சுவரைச் சுற்றிலும் வணிக வளாகம் அமைக்க அறநிலையத்துறை அனுமதித்துள்ளது. அதற்கான பணி நடக்கிறது. இது ஆகம விதிகளுக்கு முரணானது. பக்தர்களின் போக்குவரத்து, தேர் வலம் வருவதற்கு இடையூறு ஏற்படும். ராஜகோபுரம் சேதமடைய வாய்ப்புள்ளது. வணிக வளாகம் அமைக்க தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் கார்த்திகேய வெங்கடாஜலபதி ஆஜரானார்.

கோயில் தரப்பில்,'பூஜை பொருட்கள் விற்பனை செய்ய கடைகள் கட்டப்படுகிறது,' என தெரிவிக்கப்பட்டது.

நீதிபதிகள்: காலியிடம் உள்ளது என்பதற்காக கோயிலை மறைக்கும் வகையில் கட்டு மானம் மேற்கொள்வது ஏற்புடையதல்ல. 'பிராப்பர்ட்டீ டெவலப்பர்'களை போல் நடந்து கொள்ளக்கூடாது. இவ்வாறு விவாதம் நடந்தது.

பின் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: இவ்விவகாரத்தில் தற்போதைய நிலை தொடர வேண்டும். கலெக்டர், அறநிலையத்துறை இணை கமிஷனர், கோயில் செயல் அலுவலருக்கு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. நவ., 25 ல் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றனர்.






      Dinamalar
      Follow us