ADDED : மார் 11, 2024 06:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அமாவாசையை முன்னிட்டு அஸ்தர தேவருக்கு தீர்த்த உற்ஸவம் நடந்தது.
பல்லக்கில் அஸ்தரதேவர் சரவணப்பொய்கை கொண்டு செல்லப்பட்டார். ஆறுமுக சுவாமி சன்னதி முன்பு யாகம் வளர்க்கப்பட்டு, பூஜை முடிந்து சரவண பொய்கை தண்ணீரில் அஸ்தர தேவருக்கு பால், மஞ்சள் பொடி, திரவியப்பொடி உள்பட 16 வகை அபிஷேகம் முடிந்து தீர்த்த உற்ஸவம் நடந்தது.
பால்சுனைகண்ட சிவபெருமானுக்கு அபிஷேகம், பூஜை முடிந்து சிறப்பு அலங்காரமானது. மஹா வராஹி வழிபாட்டு மன்றத்தில் அம்மனுக்கு அபிஷேகம் பூஜை முடிந்து அன்னதானம் வழங்கப்பட்டது. தென்பரங்குன்றம் நாக முத்துமாரியம்மன் ஆலயத்தில் பிரத்தியங்கரா தேவிக்கு அமாவாசை சத்ரு சம்ஹார ஹோமம் முடிந்து, சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை, தீபாராதனை நடந்தது.

