ADDED : நவ 05, 2025 01:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி: மறைந்த பார்வர்டு பிளாக் தலைவர் மூக்கையாத்தேவருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் அறி வித்தார்.
உசிலம்பட்டி பழைய அரசு மேல்நிலைப்பள்ளி, கள்ளர் மாணவர் விடுதி இருந்த இடத்தில் ரூ.6.36 கோடி மதிப்பில் மணி மண்டபம் அமைப்பதற்கான பூமிபூஜை நடந்தது. அமைச்சர் மூர்த்தி, கலெக்டர் பிரவீன்குமார், தேனி எம்.பி., தங்கதமிழ்ச்செல்வன், சப் கலெக்டர் உட்கர்ஷ்குமார், எம்.எல்.ஏ., அய்யப்பன், தி.மு.க., மாவட்டச் செயலாளர் மணிமாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

