ADDED : ஜன 28, 2026 06:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை சவுராஷ்டிரா மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.
சவுராஷ்ட்ரா ஹைஸ்கூல் கவுன்சில் தலைவர் ராம்நாத் தலைமை வகித்தார். தலைமையாசிரியர் ஜோதிகுமார் வரவேற்றார்.
பொருளாளர் வெங்கடேஷ்பாபு முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினரான எம்.எல்.ஏ., பூமிநாதன் 11ம் வகுப்பு மாணவர்கள் 343 பேருக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். உதவித் தலைமையாசிரியர் விஜயகுமார் நன்றி கூறினார்.

