sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

பகவதிபுரம் - இடைமண் இடையே மின்மயமாக்கல் பணிகள் நிறைவு

/

பகவதிபுரம் - இடைமண் இடையே மின்மயமாக்கல் பணிகள் நிறைவு

பகவதிபுரம் - இடைமண் இடையே மின்மயமாக்கல் பணிகள் நிறைவு

பகவதிபுரம் - இடைமண் இடையே மின்மயமாக்கல் பணிகள் நிறைவு


ADDED : பிப் 28, 2024 07:02 AM

Google News

ADDED : பிப் 28, 2024 07:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : செங்கோட்டை அருகே கேரள பகுதியான பகவதிபுரம் - இடைமண் ஸ்டேஷன்களுக்கு இடையேயான ரயில் பாதையில் மின்மயமாக்கல் பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதிக வளைவுகள் கொண்ட மலைப் பாதையான செங்கோட்டை - பகவதிபுரம் - இடைமண் ரயில்வே ஸ்டேஷன்களுக்கு இடையே 34.67 கி.மீ., துார புதிய மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதையை தெற்கு ரயில்வே தலைமை மின் பொறியாளர் சித்தார்த்தா நேற்று சிறப்பு ரயில் மூலம் ஆய்வு செய்தார். பகவதிபுரத்திலிருந்து காலை 9:55 மணிக்கு ஆய்வு துவங்கி மாலை 4:00 மணி வரை நடந்தது.

இந்த ரயில் பாதையில் மின் வழித்தடங்கள் பாதுகாப்பாக அமைக்கப்பட்டுள்ளதா, ரயில் பாதையில் உள்ள குகைகள், பாலங்கள், மாநில அரசின் உயர் அழுத்த மின்வழித்தடங்கள், நடைமேம்பாலங்கள் பகுதிகளில் அங்கீகரிக்கப்பட்ட முறையில் மின் வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளதா எனவும் ஆய்வு செய்யப்பட்டது.

புதிய ஆரியங்காவு, தென்மலை, இடைமண் ஸ்டேஷன்களுக்கான மின்விசை நிலையங்களிலும், ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள மின் பராமரிப்பு கருவிகள், பாதுகாப்பு கருவிகள் ஆய்வு செய்யப்பட்டது. மின்பாதையில் 25 ஆயிரம் வாட்ஸ் மின்சாரம் பாய்ச்சப்பட்டு இடைமண் முதல் பகவதிபுரம் வரை ரயிலை இயக்கி ஆய்வு செய்தனர்.

மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் சரத் ஸ்ரீ வத்சவா, மின்மயமாக்கல் முதன்மை திட்ட இயக்குனர் சமீர் டிஹே, இணை முதன்மை மின்சார பொறியாளர் ரோஹன், உதவி மின் பொறியாளர் நாராயன் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us