ADDED : நவ 27, 2025 05:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு மக்கள் பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது. சட்டசபையில் 110 விதியின் கீழ் முதல்வர் ஸ்டாலின் அறிவித்த அடிப்படையில் ஜூலையில் மனுக்கள் பெறப்பட்டன.
டி.கல்லுப்பட்டி பேரூராட்சிக்கு முதுகு தண்டுவடம் பாதித்த மாற்றுத்திறனாளி முத்துசாமி தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு பேரூராட்சி செயல் அலுவலர் தேவி பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதில் தே.கல்லுப்பட்டி நண்பர்கள் வட்டரம் அமைப்பின் தலைவர் பாஸ்கரன், பொதுச் செயலாளர் விஜயபார்த்திபன் உட்பட பலர் பங்கேற்றனர்.

