sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ரூ.1.07 கோடியில் திட்டப்பணிகள் கிருஷ்ணகிரி நகராட்சியில் துவக்கம்

/

ரூ.1.07 கோடியில் திட்டப்பணிகள் கிருஷ்ணகிரி நகராட்சியில் துவக்கம்

ரூ.1.07 கோடியில் திட்டப்பணிகள் கிருஷ்ணகிரி நகராட்சியில் துவக்கம்

ரூ.1.07 கோடியில் திட்டப்பணிகள் கிருஷ்ணகிரி நகராட்சியில் துவக்கம்


ADDED : மார் 14, 2024 01:19 AM

Google News

ADDED : மார் 14, 2024 01:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி நகராட்சியிலுள்ள மொத்தம், 33 வார்டுகளின், பல இடங்களில் சிறு பாலங்கள், கழிவுநீர் கால்வாய், மோட்டார் பம்ப் உள்ளிட்டவைகள் அமைக்கக்கோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து முதல்கட்டமாக, 1.07 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப்பணிகளுக்கு நேற்று பூமிபூஜை நடந்தது. நகராட்சி தலைவர் பரிதா நவாப் தலைமை வகித்தார். தி.மு.க., நகர செயலாளர் நவாப் முன்னிலை வகித்தார். கிருஷ்ணகிரி, கோ ஆப்பரேட்டிவ் காலனி, பாரதி நகர், மேற்கு மாடதெரு உள்ளிட்ட பகுதிகளில் நிகழ்ச்சிகள் நடந்தன. இதில், கலந்து கொண்ட கிருஷ்ணகிரி, தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., பணிகளை, துவக்கி வைத்து பேசுகையில், “கிருஷ்ணகிரி நகராட்சியில், 9 வார்டுகளில் தார்ச்சாலை, சிமென்ட் சாலை, சிறுபாலம், கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட நலத்திட்ட பணிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. வரும் வாரத்தில் மீதமுள்ள வார்டுகளிலும் வளர்ச்சிப்

பணிகள் துவக்கி வைக்கப்படும்,” என்றார்.

கிருஷ்ணகிரி நகராட்சி துணை தலைவர் சாவித்திரி கடலரசு மூர்த்தி, நகராட்சி கமிஷனர் ஸ்டான்லி பாபு, சுகாதார அலுவலர் ராமகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் அஸ்லம், நகராட்சி கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us