sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

மாவட்டத்தில் 959 இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்

/

மாவட்டத்தில் 959 இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்

மாவட்டத்தில் 959 இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்

மாவட்டத்தில் 959 இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்


ADDED : மார் 04, 2024 10:43 AM

Google News

ADDED : மார் 04, 2024 10:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, புதிய பஸ் ஸ்டாண்ட், டோல்கேட் ஆகிய பகுதிகளில் அமைத்திருந்த போலியோ சொட்டு மருந்து முகாமை, கலெக்டர் சரயு குழந்தைகளுக்கு சொட்டு மருந்தை வழங்கி துவக்கி வைத்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 959 முகாம்கள் மூலம், 5 வயது வரையுள்ள, 1,50,767 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கலெக்டர் சரயு தெரிவித்தார்.

நிகழ்ச்சியில், சுகாதார பணிகள் துணை இயக்குனர் ரமேஷ்குமார், நகராட்சி ஆணையாளர் ஸ்டான்லி பாபு, மாவட்ட தாய் சேய் நல அலுவலர் கலைவாணி உள்பட பலர் பங்கேற்றனர்.* ஓசூர் மாநகராட்சியில் மொத்தம், 66 இடங்களில் நேற்று, குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. ஓசூர் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன் பின்புறமுள்ள அப்பாவு நகர் அரசு நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில், சொட்டு மருந்து வழங்கும் முகாமை, மாநகர மேயர் சத்யா, குழந்தைகளுக்கு வழங்கி துவக்கி வைத்தார்.

துணை மேயர் ஆனந்தய்யா, பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன், கமிஷனர் சினேகா, மாநகர நல அலுவலர் பிரபாகரன், மண்டல தலைவர் ரவி, கவுன்சிலர் வெங்கடேஷ் உட்பட பலர் பங்கேற்றனர். அதேபோல், ஓசூர் அருகே பேலகொண்டப்பள்ளி நலவாழ்வு மையத்தில், சொட்டு மருந்து வழங்கும் முகாமை, ஓசூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ் துவக்கி வைத்தார்.






      Dinamalar
      Follow us