sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 21, 2026 ,மாசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

அங்கன்வாடி ஊழியர்கள் மறியல்

/

அங்கன்வாடி ஊழியர்கள் மறியல்

அங்கன்வாடி ஊழியர்கள் மறியல்

அங்கன்வாடி ஊழியர்கள் மறியல்


ADDED : ஜன 07, 2026 06:26 AM

Google News

ADDED : ஜன 07, 2026 06:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில், நேற்று கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, அடையாள வேலை நிறுத்தம் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். மாநில துணைத்தலைவர் கோவிந்-தம்மாள் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் தேவி, செய-லாளர் சுஜாதா முன்னிலை வகித்தனர்.

போராட்டத்தில், அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்-களை அரசு ஊழியராக உடனடியாக அறிவிக்க வேண்டும். பணி ஓய்வு பெறும்போது பணிக்கொடையாக, 10 லட்சம் ரூபாய், உத-வியாளர்களுக்கு, 5 லட்சம் ரூபாய், குடும்ப ஓய்வூதியமாக, 9,000 ரூபாய், மே மாத விடுமுறை ஒரு மாதமாக வழங்க வேண்டும். குழந்தைகளின் பாதுகாப்பையும், முன்பருவ கல்வியின் முக்கியத்-துவத்தையும் கருத்தில் கொண்டு உடனடியாக காலி பணியிடங்-களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை-களை வலியுறுத்தி, சாலை மறியலில் ஈடுபட்ட, 600க்கும் மேற்-பட்டோரை கிருஷ்ணகிரி போலீசார் கைது செய்து, பின்னர் விடு-வித்தனர்.

* தர்மபுரியில் கலெக்டர் அலுவலகம் அருகே, நேற்று மறியல் போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சுமதி தலைமை வகித்தார்.

இதில், சாலை மறியலில் ஈடுபட முயன்ற அங்கன்வாடி ஊழி-யர்கள், 808 பேரை போலீசார் கைது செய்து, பின்னர் மாலையில் விடுவித்தினர்.






      Dinamalar
      Follow us