/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
விதை பரிசோதனை செய்ய வேளாண் அலுவலர் அழைப்பு
/
விதை பரிசோதனை செய்ய வேளாண் அலுவலர் அழைப்பு
ADDED : டிச 22, 2025 08:21 AM

கிருஷ்ணகிரி: விதையின் தரத்தை அறிய, விதை பரிசோதனை அவசியம் என, கிருஷ்ணகிரி விதை விற்பனை நிலைய வேளாண் அலுவலர் லோகநாயகி கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தரமான விதை என்பது, முளைப்புத்திறன், புறத்துாய்மை, பிற ரக கலப்பு மற்றும் ஈரப்பதம் ஆகியவற்றை குறிக்கும். தேவையான பயிர் எண்ணிக்கையை பராமரிக்க, நல்ல முளைப்பு திறன் வேண்டும். இதனால் விதை செலவு குறையும். புறத்துாய்மை பரிசோதனையில், பிற பயிர் விதை மற்றும் களை விதை கலப்புகள் கண்டறியப்படுவதால், விதையின் இனத்துாய்மை மற்றும் புறத்துாய்மை காப்பாற்றப்படுகிறது. விதைகளை சேமிக்கும் போது, பூச்சி நோய் தாக்குதலால் முறைப்புத்திறன் கெடாமல், நீண்ட நாட்கள் சேமிக்க, விதைகளின்
விதை விற்பனையாளர்கள், தாங்கள் இருப்பு வைத்துள்ள விதையின் தரத்தை அறிந்து கொள்ள விதை மாதிரி எடுக்க வேண்டும். விதை உரிய விபரங்களுடன் ஒரு மாதிரிக்கு, 80 ரூபாய் என்ற விகிதத்தில் வேளாண் அலுவலர், விதை பரிசோதனை நிலையம், ஒருங்கிணைந்த வேளாண் அலுவலகம், கலெக்டர் அலுவலகம், கிருஷ்ணகிரி என்ற முகவரிக்கு அனுப்பி, தரத்தை அறிந்து கொள்ளலாம். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.

