/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மாவட்ட கலைத்திருவிழா போட்டி 606 மாணவ, மாணவியர் பங்கேற்பு
/
மாவட்ட கலைத்திருவிழா போட்டி 606 மாணவ, மாணவியர் பங்கேற்பு
மாவட்ட கலைத்திருவிழா போட்டி 606 மாணவ, மாணவியர் பங்கேற்பு
மாவட்ட கலைத்திருவிழா போட்டி 606 மாணவ, மாணவியர் பங்கேற்பு
ADDED : அக் 28, 2025 01:21 AM
கிருஷ்ணகிரி, மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டியில், 606 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
கிருஷ்ணகிரி புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப்பள்ளியில், அரசு மற்றும் அரசு உதவி பெறும், ஒன்று முதல், 5ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு, மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டி கள் நேற்று துவங்கியது.
இதில், ஒன்று மற்றும், 2ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு, ஒப்புவித்தல், கதை கூறுதல், வண்ணம் தீட்டுதல், மாறுவேடம், களிமண் பொம்மை தயாரித்தல் ஆகிய போட்டிகளும், 3 முதல், 5ம் வகுப்புக்கு, பேச்சு, திருக்குறள், மெல்லிசை, தேசபக்தி பாடல், களிமண் பொம்மை தயாரித்தல், மாறுவேடம், நாட்டுப்புற நடனம், பரத நாட்டியம், ஓவியம் என, 18 வகையான போட்டிகள் நடந்தன. இதில், 10 ஒன்றியங்களை சேர்ந்த, 241 பேர், அரசு உதவி பெறும் பள்ளியை சேர்ந்த, 405 பேர் என மொத்தம், 606 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். போட்டிகளுக்கு, 54 பேர் நடுவர்களாக செயல்பட்டனர்.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மீனாட்சி வரவேற்றார். போட்டிகளை சி.இ.ஓ., (பொ) முனிராஜ் துவக்கி வைத்து, பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.
இதில், டி.இ.இ.ஓ., மோகன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் வெங்கடேசன், மாவட்ட உதவி திட்ட அலுவலர் மகேந்திரன் ஆகியோர் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை வட்டார வள மேற்பார்வையாளர் அசோக்குமார், கெலமங்கலம் மேற்பார்வையாளர் சேட்டு ஆகியோர்
செய்திருந்தனர்.

