sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

பல்வேறு இடங்களில் 5 பேர் மாயம்

/

பல்வேறு இடங்களில் 5 பேர் மாயம்

பல்வேறு இடங்களில் 5 பேர் மாயம்

பல்வேறு இடங்களில் 5 பேர் மாயம்


ADDED : அக் 25, 2025 01:13 AM

Google News

ADDED : அக் 25, 2025 01:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி, மகாராஜகடை அடுத்த மல்லிநாயனப்பள்ளியை சேர்ந்தவர் பிரேமா, 26. கடந்த, 22-ல், வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது கணவர் அளித்த புகார்படி, மகாராஜகடை போலீசார் விசாரிக்கின்றனர்.

* கிருஷ்ணகிரி அடுத்த பெரியகோட்டப்பள்ளியை சேர்ந்தவர் புவனேஸ்வரி, 45, விவசாயி. நேற்று முன்தினம் வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பெண்ணின் கணவர் அளித்த புகார்படி மகாராஜகடை போலீசார் விசாரிக்கின்றனர்.

* கிருஷ்ணகிரியை சேர்ந்தவர் ரோஷினி, 24. கடந்த, 22ல் வீட்டிலிருந்து வெளியில் சென்றார் மாயமானார். அவரை எங்கு தேடியும் காணவில்லை. அவரது கணவர் அளித்த புகார்படி கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

* கிருஷ்ணகிரி அடுத்த பெல்லாரம்பட்டியை சேர்ந்தவர், 15 வயது சிறுவன். அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில், 10ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த, 21ல், வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து மாணவனின் பெற்றோர் அளித்த புகார்படி, கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

* ஓசூர் ஜூஜூவாடி நேதாஜி நகரை சேர்ந்தவர் விஜய். இவரது மனைவி பவித்ரா, 23. இவர்களது மகள் வேதவர்ஷினி, 5, அரசு துவக்கப்பள்ளியில், ஒன்றாம் வகுப்பு படிக்கிறாள். கணவன், மனைவி இடையே குடும்ப பிரச்னை ஏற்பட்டது. இதனால் விரக்தியடைந்த பவித்ரா, தனது மகள் வேதவர்ஷினியை அழைத்து கொண்டு கடந்த, 22ம் தேதி இரவு, 9:00 மணிக்கு வீட்டிலிருந்து வெளியேறினார். அவர் திரும்பி வராததால், அவரது தந்தை நாராயணப்பா, 60, நேற்று முன்தினம் சிப்காட் போலீசில் புகார் செய்தார்.






      Dinamalar
      Follow us