sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

குடிநீர் இல்லாமல் சிரமப்படும் மக்கள் சாலை மறியல் செய்ய முயன்றதால் பரபரப்பு

/

குடிநீர் இல்லாமல் சிரமப்படும் மக்கள் சாலை மறியல் செய்ய முயன்றதால் பரபரப்பு

குடிநீர் இல்லாமல் சிரமப்படும் மக்கள் சாலை மறியல் செய்ய முயன்றதால் பரபரப்பு

குடிநீர் இல்லாமல் சிரமப்படும் மக்கள் சாலை மறியல் செய்ய முயன்றதால் பரபரப்பு


ADDED : ஆக 11, 2024 03:29 AM

Google News

ADDED : ஆக 11, 2024 03:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: ஓசூரில், குடிநீர் இல்லாமல் சிரமப்படும் கே.சி.சி., நகர் மக்கள், சாலை

மறியல் செய்ய திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி, 6 வது வார்டுக்கு உட்பட்ட

கே.சி.சி., நகரில், 1,200 குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதிக்கு, தனியார் லே அவுட் நிர்வாகம் மூலம் போடப்பட்ட, 3 போர்-வெல்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. கடந்த, 4 மாதமாக சரியான முறையில் குடிநீர் வழங்கப்பட-வில்லை.

கடந்த, ஒரு மாதத்திற்கு முன், 3 போர்வெல் மின்மோட்டார்க-ளுக்கு, 17 லட்சம் ரூபாய் மின்கட்டணம் பாக்கி இருந்ததால், மின்வாரியம் மின் இணைப்பை துண்டித்தது. இதனால், அவ்வப்-போது கிடைத்து வந்த குடிநீரும் மக்களுக்கு கிடைக்காமல் போனது. கே.சி.சி., நகர் லே அவுட்டை உருவாக்கிய சம்பத்-செட்டி, 6 லட்சம் ரூபாயும், அப்பகுதி மக்கள், 4 லட்சம் ரூபாயும் என மொத்தம், 10 லட்சம் ரூபாயை மின்வாரியத்திற்கு கட்டினர். மீதமுள்ள, 7 லட்சம் ரூபாயை கட்டினால் தான் மின் இணைப்பு வழங்கப்படும் என மின்வாரியம் கூறி விட்டது.

இதற்கிடையே, மக்களின் குடிநீர் பிரச்னையை தீர்க்க, மாநக-ராட்சி மூலம் ஒரு புதிய போர்வெல் போடப்பட்டது. பழைய மின்பாக்கியை கட்டாததால், புதிய இணைப்பு கொடுக்க முடி-யாது என மின்வாரியம் கூறி விட்டது. மக்கள் குடிநீர் கேட்டு மாநகராட்சி நிர்வாகம் மற்றும் அப்பகுதி தி.மு.க., கவுன்சிலர் மம்தா சந்தோஷிடம் முறையிட்டும் தீர்வு கிடைக்கவில்லை.

மின்வாரியத்திற்கு கட்ட வேண்டிய, 7 லட்சம் ரூபாய் பாக்-கியை, சம்பத்செட்டியும் கட்டாமல் இழுத்தடித்து வருகிறார். இதனால் நேற்று காலை குடிநீர் கேட்டு சாலைமறியல் செய்ய அப்பகுதி மக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஹட்கோ போலீசார் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி நாளைக்குள் (௧௨ம் தேதி) குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்ப-தாக உறுதியளித்தனர். குறிப்பிட்ட தேதியில் குடிநீர் வழங்கா-விட்டால், 14 ல் சாலைமறியல் போராட்டம் செய்வோம் என கூறி மக்கள் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us