sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

காத்திருந்து காத்திருந்து கலெக்டர் துவக்கினார் அரசு டவுன் பஸ் சேவை

/

காத்திருந்து காத்திருந்து கலெக்டர் துவக்கினார் அரசு டவுன் பஸ் சேவை

காத்திருந்து காத்திருந்து கலெக்டர் துவக்கினார் அரசு டவுன் பஸ் சேவை

காத்திருந்து காத்திருந்து கலெக்டர் துவக்கினார் அரசு டவுன் பஸ் சேவை


ADDED : ஆக 27, 2024 11:38 PM

Google News

ADDED : ஆக 27, 2024 11:38 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த ராமன்தொட்டி, பெரியகுத்தி, கமலகொண்ட கொத்துார் பகுதி மக்கள், முதுகுறுக்கி, பேரிகை அரசு பள்ளிகளுக்கு சென்று வர, '314 - ஏ' என்ற ஒரு டவுன் பஸ் மட்டுமே இயக்கப்பட்டது. கூடுதல் பஸ் வசதி கோரி, பல ஆண்டுகளாக போராடி வந்தனர்.

அதன்படி நேற்று, அப்பகுதிகளுக்கு விடப்பட்ட, 'டி - 08' எண் கொண்ட புதிய அரசு டவுன் பஸ் பேரிகை வரை வந்து, திரும்பிச் சென்றது. இதனால் அதிர்ச்சியடைந்த, 50க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள், அப்பகுதியினர் நேற்று, கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். நீண்ட காலமாக கோரி வந்த பஸ் சேவை கிடைத்தும், பஸ் இயக்கப்படாதது ஏன் என, அவர்கள் கேள்வி எழுப்பினர்.

போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது:

கிருஷ்ணகிரி, தி.மு.க., மேற்கு மாவட்ட செயலர் பிரகாஷ் எம்.எல்.ஏ., ஓரிரு நாட்களில் பஸ்சை கொடியசைத்து துவக்கும் நிகழ்ச்சி நடக்க உள்ளது. அதன்பின் புதிய பஸ் இயக்கப்படும். அதற்காகத் தான், காத்திருக்கிறோம்.

இவ்வாறு கூறினர்.

இதையறிந்த கலெக்டர் சரயு, நேற்று மதியம், 3:30 மணிக்கு, சூளகிரி பஸ் ஸ்டாண்ட் பகுதியில், அந்த அரசு டவுன் பஸ்சை, கொடியசைத்து துவக்கி வைத்தார். கலெக்டரின் அதிரடியால், மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.






      Dinamalar
      Follow us