/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கிளைச்சிறையில் சமையலர் பணி வரும் 28க்குள் விண்ணப்பிக்கலாம்
/
கிளைச்சிறையில் சமையலர் பணி வரும் 28க்குள் விண்ணப்பிக்கலாம்
கிளைச்சிறையில் சமையலர் பணி வரும் 28க்குள் விண்ணப்பிக்கலாம்
கிளைச்சிறையில் சமையலர் பணி வரும் 28க்குள் விண்ணப்பிக்கலாம்
ADDED : மார் 11, 2024 01:51 AM
கரூர்:கரூர்
கிளைச்சிறையில் காலியாக உள்ள சமையலர் பணியிடத்திற்கு, வரும்,
28க்குள் விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:தமிழக
சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறையின் கீழ் இயங்கும்
திருச்சி மத்தியசிறையின் கட்டுப்பாட்டில் உள்ள கரூர்
கிளைச்சிறையில், காலியாக உள்ள சமையலர் பணியிடத்திற்கு, 8-ம் வகுப்பு
தேர்ச்சி மற்றும் சமையல் பணியில், 2 ஆண்டு அனுபவம் உள்ளவர்கள்
விண்ணப்பிக்கலாம். இதற்கு, 18 முதல், 34 வயதுக்குட்பட்ட மிகவும்
பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்தவர்கள் நியமனம் செய்யப்பட
உள்ளனர். விண்ணப்ப படிவங்களை, திருச்சி மத்திய சிறை, சிறை
கண்காணிப்பாளருக்கு, வரும், 28க்குள் அனுப்ப வேண்டும். இவ்வாறு,
அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

