நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை: குளித்தலை அருகே திம்மாச்சிபுரத்தை சேர்ந்தவர் சுக்ரன் மனைவி கண்ணகி, 59. இவர் திம்மாச்சிபுரம் பஸ் ஸ்டாண்ட் அருகே-யுள்ள, தனியார் வங்கி ஓரத்தில் நேற்று காலை நின்று கொண்டி-ருந்தார்.
அப்போது, அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனம், மோதியதில், பலத்த காயங்களுடன் தடுமாறி விழுந்தார். விபத்தை ஏற்படுத்தியவர் தப்பிச் சென்றார். அக்கம் பக்கத்தினர் கண்ணகியை மீட்டு, குளித்தலை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரி-வித்தனர். பின்னர் உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து, லாலாப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்-றனர்.

