/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
விஷ வண்டு கடித்துமூன்று பேர் 'அட்மிட்'
/
விஷ வண்டு கடித்துமூன்று பேர் 'அட்மிட்'
ADDED : மே 04, 2025 02:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை குளித்தலை அடுத்த, மருதுார் டவுன் பஞ்., விஸ்வநாதபுரம் கிராமத்தில், கடலுார் மாவட்டம் பண்ருட்டி அடுத்த, மணப்பாக்கத்தை சேர்ந்த கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் பவித்ரா, 40, புகழ், 14, தேவி, 38, உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.
நேற்று காலை கரும்பு வெட்டும் போது, விஷ வண்டு (கதண்டு வண்டு) கடித்ததில் பவித்ரா, புகழ், தேவி ஆகிய மூன்று தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு, குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.

