sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 23, 2025 ,கார்த்திகை 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

முருகன் கோவில் ஆக்கிரமிப்பு இடங்கள் ஆய்வு

/

முருகன் கோவில் ஆக்கிரமிப்பு இடங்கள் ஆய்வு

முருகன் கோவில் ஆக்கிரமிப்பு இடங்கள் ஆய்வு

முருகன் கோவில் ஆக்கிரமிப்பு இடங்கள் ஆய்வு


ADDED : நவ 07, 2025 12:35 AM

Google News

ADDED : நவ 07, 2025 12:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், வெண்ணைமலை, கோவில் ஆக்கிரமிப்பு இடங்கள் மற்றும் மீட்பு நடவடிக்கையை, திருத்தொண்டர் சபை நிறு-வனர் ராதாகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டார்.

கரூர் அருகே, வெண்ணைமலை பாலசுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமாக, 507 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் வீடுகள், வணிக நிறுவனங்கள் கட்டப்பட்டு, பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் உள்ளன. அந்த இடங்களை மீட்க வேண்டும் என, ஹிந்து சமய அறநிலையத் துறைக்கு நீதி-மன்றம் உத்தரவிட்டது.

கடந்த வாரம், கோவில் நிலங்களை மீட்க முயற்சி செய்யாத அதி-காரிகள் மீது, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ராதாகிருஷ்ணன் மீண்டும் மனு தாக்கல் செய்தார். பின், நீதிமன்றம் உத்தரவிட்டதன்படி, இடங்களை மீட்கும் பணியில் அறநிலையத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஆக்கிரமிப்பு பணிகளை மூன்றாம் நாளாக நேற்று ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார். வெண்ணைமலை பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்கள் மற்றும் மீட்பு நடவடிக்கையை ஆய்வு செய்தார். பின்னர் அதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.






      Dinamalar
      Follow us