ADDED : நவ 17, 2024 01:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முருகன் கோவிலில்சஷ்டி விழா பூஜை
கிருஷ்ணராயபுரம், நவ. 17-
கிருஷ்ணராயபுரத்தில், பாலதண்டாயுதபாணி முருகன் கோவில் உள்ளது. இங்கு சஷ்டி விழாவை முன்னிட்டு சிறப்பு வழிபாடு பூஜை நடந்தது. முன்னதாக, பாலதண்டாயுதபாணி முருகனுக்கு பல்வேறு திரவியங்களால் அபிேஷகம் செய்து, மலர் மாலைகள் கொண்டு அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. ஏராளமானோர் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

