/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
இடைநிலை ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்
/
இடைநிலை ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்
ADDED : ஜன 06, 2026 06:42 AM
கரூர்: கரூரில், இடைநிலை ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர் மாவட்ட இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில், மாவட்ட துணைத்தலைவர் சங்கரேஸ்வரி தலைமையில், வட்டார போக்குவரத்து அலுவலகம் முன், காத்திருப்பு போராட்டம் நடந்தது.
அதில், தமிழகத்தில் கடந்த, 2009ம் ஆண்டு ஜூன் மாதத்துக்கு பிறகு, நியமனம் செய்யப்பட்ட இடை-நிலை ஆசிரியர்களுக்கு, சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும், கடந்த, 2021ல் தி.மு.க., அளித்த தேர்தல் வாக்குறு-தியை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கை-களை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். காத்திருப்பு போராட்டத்தில், வட்டார தலைவர்கள் சுரேஷ், செல்வராஜ், ஷாலினி உள்பட பலர் பங்கேற்றனர்.

