/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பள்ளப்பட்டியில் வேகத்தடை அமைக்க வேண்டுகோள்
/
பள்ளப்பட்டியில் வேகத்தடை அமைக்க வேண்டுகோள்
ADDED : நவ 27, 2025 02:02 AM
அரவக்குறிச்சி, பள்ளப்பட்டியில் இருந்து திண்டுக்கல் செல்லும் சாலையில், ஷாநகர் கார்னர் பகுதி உள்ளது. பள்ளப்பட்டியில் இருந்து திண்டுக்கல் செல்லும் வாகன ஓட்டிகள், கனரக வாகனங்கள், பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் வேகமாக செல்கின்றன.
இப்பகுதியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. காலை, மாலை வேளைகளில் மாணவ, மாணவியர் சாலையை கடக்கும் போது, வாகன ஓட்டிகள் வேகமாக வருவதால் அச்சமடைகின்றனர். இதே போல வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் வேகமாக வரும் வாகன ஓட்டிகளால் பயத்துடனேயே சாலையை கடக்கின்றனர்.
எனவே அனைவரின் நலன் கருதி, ஷா நகர் கார்னர் பகுதியில் வேகத்தடை அமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

